நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம் : எல்.முருகன் பெருமிதம்!
Oct 9, 2025, 04:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு அதிகம் : எல்.முருகன் பெருமிதம்!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் வளர்ச்சியில் பெண் குழந்தைகளின் பங்கு அதிகம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரியின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசியவர்,

நம் நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? அப்துல் கலாம் அய்யாவின் கனவு என்ன? அதனை முன்னெடுத்து வைக்கும் வகையில் தான் நாம் முன்னேறி கொண்டு வருகிறோம். நம் நாட்டின் வளர்ச்சியில் பெண் குழந்தைகளின் பங்கு வேகமாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் நர்சிங் துறையில் இந்திய மாணவிகள் தான் அதிகம் உள்ளனர் என்று பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு பிறகு இந்தியாவின் முகம் மாறி இருக்கின்றது என கூறினார்.

உக்ரைன் ரஷ்யா போரில் போர் முனையில் இருந்து 20,000 மருத்துவ மாணவிகளை இங்கே அழைத்து வந்திருக்கிறோம். நாம் என்ன சொல்கிறோமோ அதனை உலக நாடுகள் கேட்கிறது.

2047 ஆண்டு நம் 100 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளை ஆளப் போவதும், வழிநடத்தப் போவதும் இப்போதைய இளைஞர்கள் மத்தியில் தான் உள்ளது என அமைச்சர் கூறினார்.

இன்று அனைத்து பகுதிகளிலும் உலக நாடுகளுக்கு இணையான அடிப்படை கட்டமைப்புகளை, சமூக கட்டமைப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

2047 இல் ஏழைகள் இல்லாத நாடாக, அனைத்தும் கிடைக்கின்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும். நம் மாணவிகள், சகோதிரிகள் உயரிய துறையில் வர வேண்டும் என்பதால் தேசிய ராணுவ அகாடமியில் பெண்களுக்கான அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதே போல பாராளுமன்றத்தில் 33 சதவிகித இட ஒதுக்கீட்டில் பெண்கள் உள்ளனர், அதற்கான ஏற்பாட்டையும் பிரதமர் உருவாக்கி உள்ளார். எல்லா ஜனவரி 26-லும் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பெண்களின் பங்களிப்பு கௌரவமாக இருக்கும். 2047 இல் நாடு வல்லரசு ஆவதற்கு உண்டான பாதையில் சந்திரயான் மிஷனில் இயக்குனராக பணியாற்றியது தென்காசியை சேர்ந்த பெண் தான்.

குறிப்பாக இந்தியா அடிப்படை கட்டமைப்புகளான விமானநிலையங்கள், மெட்ரோ, 8 வழி சாலை, எக்ஸ்பிரஸ் ஹைவே, புல்லட் ரயில், வந்தே பாரத் ரயில்கள் என உலக நாடுகள் அளவில் மேம்படுத்தி வருகிறோம். வந்தே பாரத் ரயில்கள் நமது உள்நாட்டு உற்பத்தி ஆகும், சுயசார்பின் அடிப்படையில் நம் சென்னையில் ஐசிஎஃப் இல் அவை தயாரிக்கப் படுகின்றது.

எப்போதும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காக தான் பிரதமர் ஸ்டார்டப் நிறுவனங்களை கொண்டு வந்துள்ளார். சந்திரயான் திட்டத்திற்கு தேவையான பொருட்களை வழங்கியது ஒரு ஸ்டார்ட்டப் நிறுவனம் தான் என பேசிய அமைச்சர் எல் முரூகன், கடந்த ஆண்டு மட்டும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என பேசினார்.

நாம் நம்மை ஆட்சி செய்த இங்கிலாந்தை பின் தள்ளி, இன்று வளர்ந்த பொருளாதாரத்தில் 5 வது இடத்தில் உள்ளோம். 2047 இல் முதல் இடத்திற்கு நிட்சயம் நாம் முன்னேறுவோம். இன்று கிரியேட்டிவ் எகானமி உருவாக்குவதில் உலக அளவில் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்த கிரியேட்டிங் எகனாமியில் நம் மக்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

ஹாலிவுட் படங்களின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் இங்கிருந்து செய்து கொடுக்கிறார்கள் என அவர் பேசினார்.

தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை குறித்து பேசிய அமைச்சர், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தும் போது இதனை யார் பயன்படுத்துவர்கள் என கூறினர். ஆனால் சத்தியமங்கலம் காட்டிற்கு அருகே ஒரு பகுதியில் வெள்ளரிக்காய் விற்கும் பெண்மணி ஒருவரிடம் நான் கூகிள் பே மூலம் வெள்ளரிக்காய் வாங்கினேன். ஈரோட்டில் இருக்கும் காட்டிற்குள்ளேயும் கூட இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனை உதவுகிறது.

இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் நாம் உலக அளவில் 3 வது இடத்தில் உள்ளோம் என்பதே அதன் பெருமை ஆகும் என எல்.முருகன் பேசினார்.

Tags: bjp l muruganWomen's role in the country's development is significant: L. Murugan is proud!
ShareTweetSendShare
Previous Post

இலங்கையில் பிரதமர் மோடி : ராணுவ முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

ஆபரேஷன் பிரம்மா : இந்தியாவுக்கு நன்றி  – மியான்மர் மக்கள் உருக்கம்!

Related News

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

திருச்செந்தூர் கோயிலில் 22- ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா – பாதுகாப்பு பணியில் 4,000 போலீசார்!

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies