திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!
Aug 2, 2026, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து சட்டம் – ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் டாஸ்மாக், கனிம வளம் என அனைத்திலுமே திமுக ஊழல் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதே போல மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களின் கையில் புத்தகத்திற்கு பதிலாக கஞ்சா பொட்டலங்கள் உள்ளதாகவும், உயர் ரக போதைப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இதில் என்.டி.ஏ கூட்டணியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது கண்டன உரையாற்றிய டிடிவி தினகரன், தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்களுக்கு பின்னால் திமுக நிர்வாகிகளின் தலையீடு இருப்பதாக விமர்சித்தார்.

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவதே திமுக அரசின் வாடிக்கை என்று கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து தாராளமாக நிதி பெற்றுவிட்டு, நிதியே வழங்கவில்லை என திமுக வீண் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் விமர்சித்தார்.

கடலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் ஊழல்கள் நடைபெறாத துறைகளே இல்லை எனவும், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஸ்டாலின் தமிழகத்தில் செயலற்ற முதலமைச்சராக இருந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதே போல புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags: ChennaiAIADMK general secretary Edappadi PalaniswaminainarM.G.R. Nagarnda alliance protest
ShareTweetSendShare
Previous Post

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

Next Post

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Related News

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies