தெலங்கானாவில் அரசு பேருந்தில் குனிந்து கொண்டு டிக்கெட் வழங்கிய 7 அடி உயரமுள்ள நடத்துநருக்குப் பணி மாறுதல் வழங்கி அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள மெஹதிபட்னம் பணிமனையில், அகமது மெஹதி என்பவர் நடத்துநராக பணியாற்றி வருகிறார்.
அரசு பேருந்தின் உட்புற உயரம் 6.4 அடி உள்ள நிலையில், 7 அடி உயரமுள்ள அகமது மெஹதி நாள்தோறும் குனிந்து கொண்டே பயணிகளுக்கு டிக்கெட் வழங்கியுள்ளார்.
இதுதொடர்பான வலைத்தளங்களில் வெளியான நிலையில், அகமது மெஹதிக்கு பணி மாறுதல் வழங்கி தெலங்கானா போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னாள பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.