மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடல், அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வடபழனியில் உள்ள மின்மயானத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.