சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1 கோடி ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 14 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.
அதன்படி, 1 கோடியே 6 லட்சத்து 78 ஆயிரத்து 777 ரூபாயும், 1 கிலோ 290 கிராம் தங்கமும், 3 கிலோ 960 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளளது.