கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நட்புகள், உறவுகள் கூடும் விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார்.
தென் திருப்பதி நால்ரோடு பகுதியில் என்.எஸ்.பி குழுமத்தின் சார்பில் நட்புகள், உறவுகள் ஒன்று கூடும் உன்னத விழா நடைபெற்றது. சாதி, மத பேதமின்றி அனைவரும் சமம் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், இதனை ஏற்பாடு செய்த விழாக் குழுவிற்குப் பாராட்டு தெரிவித்தார்.