வழக்கறிஞர்கள், காவல்துறையினர் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்துவைத்தது.
கடந்த 2009-ம் ஆண்டு ஜனதா தள கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களைக் கைது செய்தபோது காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கூறி 28 வழக்கறிஞர்கள் மற்றும் 4 காவல்துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவானது விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி நிர்மல்குமார் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.