மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!
Jun 6, 2025, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கூடத்தில் அதிகாலை முதலே மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி அப்பகுதி அரசு டாஸ்மாக் மதுபான கூடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விலையைக் கூட்டி விற்பனை செய்ததாகவும், இதனைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் ஆதரவுடன் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மகாவீர்  ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: Liquor sales surge on Mahavir Jayantiமகாவீர் ஜெயந்திமதுபான விற்பனை
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜக தலைவர் தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

Next Post

வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!

Related News

திருச்சி : கடன் வழங்குவதில் மோசடி – அரசு வங்கி மேலாளருக்கு சிறை!

நெல்லை : முதல் நாள் வகுப்பிற்கு குதிரையில் சென்ற குழந்தைகள்!

மேட்டுப்பாளையம் அருகே அஜாக்கிரதையாக திரும்பிய காரால் விபத்து!

மதுரை : மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கோவை : பட்டதாரி இளைஞரிடம் பணமோசடி – திமுக கவுன்சிலர் தலைமறைவு!

வெண்ணாற்றில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

எனது குடும்ப பெயரை பயன்படுத்தி மோசடி – அக்ஷரா ஹாசன்!

பஞ்சாப் : ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் 41 வது நிறைவு நாள் – பாதுகாப்பு அதிகரிப்பு!

கொல்கத்தா : இன்ஸ்டா பிரபலமான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஜாமீன்!

உலகின் முதல் சைவ நகரம்!

கர்நாடகா : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

குமாரபாளையம் – மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies