வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!
Aug 10, 2026, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பெருமழையில் வீடுகளை இழந்த தவிக்கும் தங்களுக்கு ஓராண்டைக் கடந்தும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக அதிக கன மழை பெய்தது. இதன் காரணமாகத் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்த வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வெள்ள நீர் சூழ்ந்து, பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் முற்றிலுமாக இடிந்து விழுந்து சேதமானது. இதனால் வீடுகளை இழந்து மக்கள் பரிதவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

கனமழையால் 50 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கணக்கீடு செய்தனர். மேலும் தமிழக அரசு சார்பாகச் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அதிகாரிகள்  மக்களிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து  ஸ்ரீ வைகுண்டம் பேரூராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்கள் வீடு கட்டுவதற்காக ஆணை வழங்கி, முதல் தவணையாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கியுள்ளது.

அதன் பிறகு ஒவ்வொரு கட்ட கட்டுமான பணிக்கும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை நம்பி பாதி, சேதமடைந்த வீடுகளை மக்கள் முழுமையாக இடித்துள்ளனர்.

சிலர் கட்டுமான பணிகளை ஆரம்பித்துப் பாதி கட்டிட வேலையை முடித்துள்ளனர். ஆனால் ஓராண்டைக் கடந்தும் இதுவரை தமிழக அரசு மீதத் தொகையான 4 லட்ச ரூபாயை வழங்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்கவில்லை எனில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க உள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரண தொகையை நம்பி ஓராண்டுக்கும் மேலாக வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: tamil janamதூத்துக்குடி மாவட்டம்People who lost their homes in the floods: Allegation that no relief has been provided even after a year!
Share
Tweet
SendShare
Previous Post

மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!

Related News

ஏஐ.யால் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி;ஸ்ரீதர் வேம்பு

ஆபரேஷன் சிந்தூரில் நடந்தது என்ன? : தாக்குதல்களை முடிப்பதற்கு முன்பே போர்நிறுத்தத்திற்கு கெஞ்சிய பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் – திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன்

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஆடி அமாவாசை – காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது – அமித் ஷா புகழாரம்!

உயர்ரக போதை பொருள் புழக்கம் – பொத்தேரியில், பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீசார் சோதனை!

நிபந்தனைகளை ஏற்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது – ஈரான் திட்டவட்டம்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

அரசு வாகனம் வர தாமதம் – ஆட்டோவில் பயணம் செய்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!

தவெகவில் 27 மாவட்ட செயலாளர்கள் நியமனம் – விஜயபாஸ்கர்களுக்கும் பதவி!

புதுச்சேரி  சென்ற மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies