இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் விவசாயி!
Oct 9, 2025, 11:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் விவசாயி!

Web Desk by Web Desk
Apr 14, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நச்சுத்தன்மை கொண்ட உரங்களாலும், மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையிலும் விவசாயத்தையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வரும் செங்கல்பட்டைச் சேர்ந்த விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அடுத்த ஒத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வடிவேல், இயற்கை விவசாயத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

செயற்கை உரங்கள், அதிகளவு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து தனது நிலங்களில் இயற்கை முறை உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதில் வடிவேல் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டில் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த தன் மகனைப் போல வேறு யாரும் பிறந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க விரும்பி அதற்காகக் கர்நாடகா, ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற வடிவேல், இயற்கை உரங்கள் குறித்த பல்வேறு விதமான ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவால் இலைக் கரைசல், பஞ்ச காவியம், மீன் அமிலம் போன்ற இயற்கைமிக்க உரங்கள் தான் வடிவேல் தோட்டத்துப் பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக விளங்கி வருகின்றன.

செயற்கை உரங்கள், இடுபொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி மகசூல் விவசாயத்தை விட, மண்புழு உரம், இலைக் கரைசல், பஞ்ச காவியம் ஆகியவற்றைக் கொண்டு சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் அதிகளவிலான மகசூலைத் தருவதாக வடிவேல் தெரிவித்திருக்கிறார்.

மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏதுவாக விவசாய முறையையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி வடிவேலு மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

Tags: special storyசெங்கல்பட்டு மாவட்டம்Farmer setting a record through organic farmingசாதனை படைக்கும் விவசாயிஇயற்கை விவசாயம்
ShareTweetSendShare
Previous Post

தமிழ் புத்தாண்டு – சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பு பூஜை!

Next Post

ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா : வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

Related News

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Load More

அண்மைச் செய்திகள்

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies