டொமினிக் குடியரசில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்த விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 221 ஆக உயர்ந்துள்ளது.
படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்களில் பலர் சுற்றுலாப் பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.