முடங்கும் தொழில் நகரம் : திமுக ஆட்சியில் தொழில்முனைவோர் விரக்தி!
Mar 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முடங்கும் தொழில் நகரம் : திமுக ஆட்சியில் தொழில்முனைவோர் விரக்தி!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் தொழில்முனைவோர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆட்சிக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்தபின் அதனை நிறைவேற்ற மறுப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசுக்குத் தொழில்முனைவோர் விடுத்திருக்கும் கோரிக்கைகளை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன், சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சலுகை விலையில் மின் கட்டணம், புதிய காற்றாலை அமைக்க அனுமதி, விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை, டெண்டர் விலையில் 10 சதவீத சலுகை, சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் குழு.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் சில தான் இவை. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பல தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில்  பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியது.

தொற்று பரவல் குறையத் தொடங்கி படிப்படியாக மீண்டு வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஒரேயடியாக முடக்கும் வகையில் மின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியது திமுக அரசு. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இடமாகத் திகழும் கோவையில் தொழில் முனைவோர்களின் நிலை மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பம்ப் செட் உற்பத்தி தொழில், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொழிலாக இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க தொழிலும் மின் கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வால் முடங்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி நிறைவடைய ஓராண்டே மீதமிருக்கும் நிலையில், கோவை மாநகர தொழில் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

வெளிநாடுகளுக்குப் பயணம், தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனக் கவனம் செலுத்தும் தமிழக அரசு, சொந்த மாநிலத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில்முனைவோர் மத்தியிலிருந்து எழுந்துள்ளது.

Tags: திமுக ஆட்சிParalyzing industrial city: Entrepreneurs frustrated with DMK ruleமுடங்கும் தொழில் நகரம்தொழில் நகரம்
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா!

Next Post

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies