கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் ஏரியில் கெட்டுப்போன கோழிகளை ஒப்பந்ததாரர் கொட்டிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவர் மீன் குத்தகை ஏலம் எடுத்துள்ள நிலையில், மீன்களுக்கு உணவளிப்பதற்காகக் கெட்டுப்போன கோழிகளைக் கொட்டியுள்ளார்.
இதனால் புளியம்பட்டி, கீழ் மைலம்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் கடும் துற்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.