உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அறக்கட்டளைக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது.
இதனையடுத்து ராமர் கோயிலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரே மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இதுகுறித்த தகவல் ராமர் கோயில் அறக்கட்டளையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.