முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 52 கோடி மக்களுக்குத் தொழில் தொடங்குவதற்காகப் பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருவது கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன எனவும் பங்கஜ் சவுத்ரி கூறினார்.