பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா ஆஜரானார்.
அரியானா மாநிலத்தின் குருகிராம் அருகில் உள்ள சிகோபூர் என்ற இடத்தில் மூன்றரை ஏக்கர் நிலத்தை ராபர்ட் வதோரா விலைக்கு வாங்கினார்.
அந்த நிலத்தை ராபர்ட் வதோரா 58 கோடிக்கு டி.எல்.எப். நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
கடந்த 8-ம் தேதி ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த சம்மனுக்கு ராபர்ட் வதோரா ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இரண்டாவது முறையாகச் சம்மன் அனுப்பப்பட்டதால் ராபர்ட் வதோரா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.