அல்வா கொடுப்பது யார்? : இருட்டுக்கடை வரதட்சணை புகார் - பரஸ்பர குற்றச்சாட்டால் குழப்பம்!
Jul 24, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அல்வா கொடுப்பது யார்? : இருட்டுக்கடை வரதட்சணை புகார் – பரஸ்பர குற்றச்சாட்டால் குழப்பம்!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்வாவுக்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் தமது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதற்கு அவரது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாராவது ஒருவர் நம்மை ஏமாற்ற முயன்றால் “எனக்கே அல்வா கொடுக்க பாக்குறியா” என்று கேட்போம். ஆனால் அத்தகைய அல்வாவை சுவைப்படத் தயாரிக்கும் இருட்டைக்கடைக்கே அல்வா கொடுக்க முயல்வதாக பல்ராம் சிங் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நெல்லைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவது இருட்டுக்கடை அல்வா. 1940-களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு, தற்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது இந்த அல்வா கடை.

மின்விளக்குகள் அதிகமில்லாத காலத்தில் தொடங்கப்பட்டதால் இருட்டுக்கடை என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக்கடையின் உரிமையாளரான ஹரிசிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது மனைவி கவிதா சிங் கடையை கவனித்து வருகிறார். இந்த தம்பதியின் மகளான ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தமது கணவர் பல்ராம் சிங் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார் ஸ்ரீ கனிஷ்கா.

எனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருக்கிறார். இதுகுறித்து உன் வீட்டில் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். என்னிடம் உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரோ என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன் இது குறித்து மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன் என இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தெரிவித்தார்.

பல்ராம் சிங்கின் கொடுமை தாங்க முடியாமல் ஸ்ரீ கனிஷ்கா தங்களது வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் அதனைத்தொடர்ந்து இருட்டுக்கடையை தமது பெயருக்கு எழுதித்தர வேண்டும் என மருமகன் மிரட்டுவதாகவும் கவிதா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பல்ராம் சிங்கும் அவரது தந்தை யுவராஜ் சிங்கும் தங்கள் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருட்டுக்கடை விவகாரத்தில் யார் யாருக்கு அல்வா கொடுக்க முயல்கிறார்கள் என்பது காவல்துறை விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

Tags: இருட்டுக்கடை வரதட்சணை புகார்இருட்டுக்கடை அல்வாWho gives the halva? : Dark shop dowry complaint - confusion due to mutual accusations!
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம்!

Next Post

இந்தியாவுக்கு அடித்த யோகம் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு  ட்ரம்ப் அளித்த வரி விலக்கு!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies