அல்வா கொடுப்பது யார்? : இருட்டுக்கடை வரதட்சணை புகார் - பரஸ்பர குற்றச்சாட்டால் குழப்பம்!
Jan 14, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அல்வா கொடுப்பது யார்? : இருட்டுக்கடை வரதட்சணை புகார் – பரஸ்பர குற்றச்சாட்டால் குழப்பம்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 08:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்வாவுக்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் தமது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதற்கு அவரது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாராவது ஒருவர் நம்மை ஏமாற்ற முயன்றால் “எனக்கே அல்வா கொடுக்க பாக்குறியா” என்று கேட்போம். ஆனால் அத்தகைய அல்வாவை சுவைப்படத் தயாரிக்கும் இருட்டைக்கடைக்கே அல்வா கொடுக்க முயல்வதாக பல்ராம் சிங் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நெல்லைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவது இருட்டுக்கடை அல்வா. 1940-களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு, தற்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது இந்த அல்வா கடை.

மின்விளக்குகள் அதிகமில்லாத காலத்தில் தொடங்கப்பட்டதால் இருட்டுக்கடை என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக்கடையின் உரிமையாளரான ஹரிசிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது மனைவி கவிதா சிங் கடையை கவனித்து வருகிறார். இந்த தம்பதியின் மகளான ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தமது கணவர் பல்ராம் சிங் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார் ஸ்ரீ கனிஷ்கா.

எனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருக்கிறார். இதுகுறித்து உன் வீட்டில் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். என்னிடம் உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரோ என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன் இது குறித்து மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன் என இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தெரிவித்தார்.

பல்ராம் சிங்கின் கொடுமை தாங்க முடியாமல் ஸ்ரீ கனிஷ்கா தங்களது வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் அதனைத்தொடர்ந்து இருட்டுக்கடையை தமது பெயருக்கு எழுதித்தர வேண்டும் என மருமகன் மிரட்டுவதாகவும் கவிதா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பல்ராம் சிங்கும் அவரது தந்தை யுவராஜ் சிங்கும் தங்கள் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருட்டுக்கடை விவகாரத்தில் யார் யாருக்கு அல்வா கொடுக்க முயல்கிறார்கள் என்பது காவல்துறை விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

Tags: இருட்டுக்கடை அல்வாWho gives the halva? : Dark shop dowry complaint - confusion due to mutual accusations!இருட்டுக்கடை வரதட்சணை புகார்
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா : சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம்!

Next Post

இந்தியாவுக்கு அடித்த யோகம் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு  ட்ரம்ப் அளித்த வரி விலக்கு!

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies