முன்னாள் முதல் கருணாநிதியின் சமாதியில் கோயில் கோபுரம் வரையப்பட்டதற்கு தமிழக பாஜக மாநிலதுணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், அநியாயத்திற்கு ஒரு அளவே இல்லையா? திராவிட மாடல் அரசின் அராஜகத்திற்கு எல்லையே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது என்றும், இது ஓட்டு மொத்த ஹிந்துக்களை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்த செயலை கண்டிப்பதோடு, சமாதியின் மீது உள்ள கோபுரத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் ஹிந்து விரோத திமுக அரசே, ஆலயத்தை விட்டு வெளியேறு. இந்த நாள் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சமாதி கட்ட துவங்கிய நாளாகட்டும் என்றும் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.