பிளாக் மெயில் செய்யக் கூடாது எனச் சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
சீன பொருட்களுக்கு இதுவரை 145 சதவீதமாக இருந்த இறக்குமதி வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீனாவின் பழிவாங்கும் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுப்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
இந்த சூழலில், பிளாக்மெயில், அச்சுறுத்தல் விடுக்கக் கூடாது” எனச் சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனச் சீனா கூறியுள்ளது.