பகவத் கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தை வளர்த்து வருகின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் இணைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, பாரதத்தின் நாகரீக பாரம்பரியத்திற்கு இது ஒரு வரலாற்று தருணம் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இவை இரண்டும் பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தை வளர்த்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.