எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூடியூபர் ஸ்ரீவித்யாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடிபழனிசாமி மற்றும் பாஜக தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீவித்யா பேசுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீவித்யா மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஏப்ரல் 26ம் தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.