அதிமுக – பாஜக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியல்ல என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி எனவும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் அவருடன் நமது செய்தியாளர் விக்னேஷ் நடத்திய கலந்துரையாடலில்,
அமித்ஷா வருகை முதலமைச்சரைப் பதற்றமடையச் செய்திருக்கிறது என்றும் திமுகவை வீட்டிற்கு அனுப்பவே அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ளது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
ஊழலுக்காகவும் தேச விரோதத்திற்காகவும் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்று குற்றம் சாட்டிய அவர், அடுத்த தேர்தலில் மக்களால் திமுகவினர் புறக்கணிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
திமுகவினர் ஏற்கனவே டெல்லிக்கு அடிபணிந்து இருந்தவர்கள் தான் என்றும் அதிமுக – பாஜக கூட்டணியைப் பார்த்து முதல்வர் பதற்றமடைந்திருக்கிறார் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.