புளோரிடா பல்கலைக் கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் கொடூரமானது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள புளோரிடா ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்குப் பல்கலைக் கழக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை சுட்டு வீழ்த்தினர். இதுகுறித்து பேசியுள்ள டிரம்ப், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.