நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கட்சிக் கூட்டம் நடத்துவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
திமுக வடக்கு நகரச் செயலாளரான விஜயக்கண்ணன் கட்சியின் நிர்வாகிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இதனையறிந்த நகர கிளைச் செயலாளர் விஸ்வநாதன் என்பவர் தனக்கு தெரியாமல் கூட்டம் நடத்தப்படுகிறது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இருவருமிடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.