டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து வணங்குவோம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ஊடகத் துறை, கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் என பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த, பத்மஶ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம் இன்று என தெரிவித்துள்ளார்.
நம் மண்ணுக்கும், மக்களுக்கும் பெருமை சேர்த்த டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் அரும்பணிகளை நினைவு கூர்ந்து வணங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.