போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிடுமாறு இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாபர் சாதிக் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால், அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என அமலாக்கத்துறை வாதிட்டது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமின் வழக்கை சுட்டிக்காட்டினார். பின்னர் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.