சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு முறை பயணமாகப் பிரதமர் மோடி சவுதி அரேபியா புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா – சவுதி அரேபியா இடையே அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வலுவான உறவு நீடித்து வரும் நிலையில், இரு நாள் பயணமாகப் பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளார்.
அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்திக்கவுள்ள பிரதமர் மோடி, முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதிக்குச் சென்று பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும், சவுதி அரேபியாவுடனான வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.