வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட சித்தூர்கேட் பகுதியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது.
இதனைக் கடந்த இரு தினங்களுக்கு முன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திறக்கப்பட்டு 2 நாட்களே ஆன நிலையில், பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இரவோடு இரவாக அதனைச் சரி செய்த வீடியோவும் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.