கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய தலைவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோடநாடு வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கோவையில் முகாம் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், விரைவில் சயானிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோடநாடு கொலை, கொள்ளை நடைபெற்றபோது பதிவான தொலைப்பேசி பதிவுகளைச் சேகரிப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்புகள் சமூக வலைத்தள செயலி மூலமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், அவற்றைச் சேகரிப்பதிலும் சிக்கல் நீடிப்பதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.