குறைந்த செலவில் சூழல் சுற்றுலா - சுற்றுலா தலமாகும் பரளிக்காடு!
Jul 23, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குறைந்த செலவில் சூழல் சுற்றுலா – சுற்றுலா தலமாகும் பரளிக்காடு!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு கிராமம் தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக்க மாறி வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் குறைந்த செலவில் நாள் முழுவதும் சுற்றிப்பார்க்கும் இடங்கள் அடங்கிய இந்த சூழல் சுற்றுலாவை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தமிழகம் மற்றும் கேரள வனப்பகுதிகளை இணைக்கக் கூடிய அடர் வனத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் மலைக் கிராமமான பரளிக்காடு தான் தற்போதைய சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய இடமாகத் திகழ்ந்து வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கும் இப்பகுதியில் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டும் நடத்தப்படும் சூழல் சுற்றுலாவுக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

குறைந்த செலவில் நாள் முழுவதும் வனப்பகுதியில் எழில் கொஞ்சும் இயற்கையுடன் உலாவும் சூழலை அனுபவிக்க விரும்பி வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வரவேற்பு தேநீரில் தொடங்கி படகு சவாரி, பவானி ஆற்றில் குளியல் எனப் புதுவித அனுபவங்களை இந்த சூழல் சுற்றுலா ஏற்படுத்தித் தருகிறது.

மலைவாழ் மக்களின் உதவியோடு மேற்கொள்ளப்படும் படகு சவாரியின்போது கரையின் இருபுறங்களிலும் வானுயர நிமிர்ந்து நிற்கும் மரங்கள், செடி, கொடிகளோடு வனவிலங்குகளும் தென்படுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும் இந்த சுற்றுலாவில், இயற்கையின் கொடையாக உள்ள ஆறுகள் மற்றும் மரங்கள் குறித்து விழிப்புணர்வும் வழங்கப்படுகிறது.

இந்த சூழல் சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர், காரமடை வனச்சரக அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் சுற்றுலாவுக்கான கட்டணமாகச் சிறுவர்களுக்கு 500 ரூபாயும், பெரியவர்களுக்கு 600 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறக்கூடிய கட்டணங்கள் அனைத்தும் அங்கிருக்கும் மலைவாழ் மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவது அனைவராலும் வரவேற்கக் கூடியதாக அமைந்துள்ளது.

Tags: Eco-tourism at a low cost - Paralikadhu becomes a tourist destination- சுற்றுலா தலமாகும் பரளிக்காடுசூழல் சுற்றுலா
ShareTweetSendShare
Previous Post

தலைமைச் செயலகம் முன்பு போராட முயன்ற மாற்றுத்திறனாளிகள் குண்டுகட்டாக கைது!

Next Post

கர்நாடக முன்னாள் டிஜிபி கத்தியால் குத்தி கொலை – எமனாக மாறிய மனைவி!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies