சவுதி அரேபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா – சவுதி அரேபியா இடையே அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் வலுவான உறவு நீடித்து வருகிறது.
இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்ற பிரதமர் மோடி, 2 நாட்கள் அரசு முறை பயணமாகச் சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார்.
ஜெட்டா நகர் விமான நிலையத்தில் பிரதமருக்கு 21 குண்டுகள் முழங்கச் சவுதி அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் சவுதி வாழ் இந்தியர்கள் பாரம்பரிய நடனமாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக பிரதமர் மோடியின் விமானம் ஜெட்டா நகரின் வான்வெளிக்குள் நுழைந்தவுடன் சவுதி அரேபிய ராணுவ விமானங்கள் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.