ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடி தனது சவுதி பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசரமாக நாடு திரும்புகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றார். பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு, 21 குண்டுகள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பஹெல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக, தனது சவுதி பயணத்தை ரத்து செய்து பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்புகிறார். காலை இந்தியா வந்தடையும் அவர் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.