டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது அல்ல எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை சட்டவிரோதமானது எனவும் சோதனையின் போது அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர் எனவும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் தரப்பு மற்றும் அமலாக்கத்துறை என அனைத்து தரப்பும் தங்களின் வாதங்களை முன்வைத்தது.
அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது அல்ல எனத் தீர்ப்பளித்தது.
மேலும், அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள்
அரசியல் பலி வாங்கும் நோக்கு, அரசியல் உள்நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரிக்க முடியாது அது தங்களின் வேலை இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்
மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் தான் நீதியை உறுதி செய்யமுடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.