பஹல்காமில் பெயரை கேட்டு இந்துக்கள் என தெரிந்ததும் பயங்கவரவாதிகள் சுட்டுக்கொன்ற செய்தி வருத்தமளிப்பதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் கொண்டு வந்த இரங்கல் தீர்மானத்தின் மீது பேசிய அவர்,
காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்ட பிறகு அமைதி நிலவியதாக தெரிவித்தார். எல்லையில் யாரும் நுழையாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
பெயரைக் கேட்டு இந்துக்கள் என தெரிந்து கொண்டு சுட்டுக் கொலை செய்திருக்கிறார்கள் என்றும், இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் இப்படி இருக்கும், பாஜக அரசு இருந்தால் இப்படி இருக்கும் என இப்பேரவையில் பேசுவது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம் என்றும் காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வோம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவத்துள்ளார்.