நவீன மருத்துவ புரட்சி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AI!
Jul 23, 2025, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவீன மருத்துவ புரட்சி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AI!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 5 ஆண்டுகளில், அனைத்து நோய்களையும் AI-யால் குணப்படுத்த முடியும் என்று Google DeepMind CEO ( Demis Hassabis) டெமிஸ் ஹசாபிஸ் கூறியிருந்த நிலையில், அவர் ஒரு ஜீனியஸ் என்று Perplexity AI நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாராட்டியுள்ளார். யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ் ? அவரை ஏன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாராட்டினார் ? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பிரிட்டனைச் சேர்ந்த 48 வயதான கணினி விஞ்ஞானி, பேராசிரியர் டெமிஸ் ஹசாபிஸ் ஒரு பிறவி மேதை ஆவார். புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற ஹசாபிஸ், நான்கு வயதிலேயே சதுரங்கத்தில் நட்சத்திர வீரராக விளங்கினார்.

13 வயதில் செஸ் மாஸ்டரான டெமிஸ் ஹசாபிஸ், கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும் ‘வீடியோ கேமிங்’- கணினி விளையாட்டு வடிவமைப்பில் பணியாற்றினார். முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதற்கு முன்பு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

2010 ஆம் ஆண்டில், இயந்திர கற்றல் நிறுவனமான (DeepMind) டீப் மைண்டை தொடங்கினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தைக் கூகுள் வாங்கியது.

Google DeepMind நிறுவனத்தின் CEO வாக இருக்கும் டெமிஸ் ஹசாபிஸ், அடுத்த 5 ஆண்டுகளில் நோய்களைக் குணப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், அனைத்து நோய்களையும் AI குணப் படுத்தும் என்று கணித்துள்ளார்.

சராசரியாக, ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க பத்து ஆண்டுகள் ஆகும். கூடுதலாக,அதைக் கண்டுபிடிக்கப் பல பில்லியன் டாலர்கள் செலவாகும். AI மூலம், ஒரு வாரத்தில் கூட ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து விடலாம்.

நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும், இது மருத்துவ உலகின் புரட்சியாகும். மேலும்,   AI  உதவியுடன் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று டெமிஸ் ஹசாபிஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஒரு Phd மாணவருக்கு, ஒரு புரதத்தைக் கண்டுபிடிக்கக் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது.ஆனால், 200 மில்லியன் புரத கட்டமைப்புகளை மேப்பிங் செய்வதன் மூலம்  ஒரே ஆண்டில், ஒரு பில்லியன் ஆண்டுக்கால Phd ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க முடியும்.

எனவே, 2030ம் ஆண்டில், ஒரு மருத்துவமனை வளாகம்  என்பது பெரிய அளவிலான  கட்டிடங்கள் இருக்காது. ஒற்றை டிஜிட்டல் உள்கட்டமைப்போடு இணைக்கப்பட்டிருக்கும்.

ஒருங்கிணைந்த கட்டளை மையங்கள், நெட்வொர்க் முழுவதும் விநியோகம் மற்றும் தேவையை LIVE- வில் கண்காணிக்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், ரோபோடிக் செவிலியர்கள் மருத்துவச் சேவையை வழங்கலாம்.

டெமிஸ்  ஹசாபிஸின் நேர்காணல்  வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ், டெமிஸ் ஒரு ஜீனியஸ் என்றும், இது நடப்பதற்கு, உலகில் உள்ள அனைத்து வளங்களையும்  அவருக்கு வழங்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

வெற்றிகரமான சிகிச்சைக்கும், பூரணக் குணமடைதலுக்கும் ஆரம்பக்கால நோய் கண்டறிதல் மிக முக்கியமானதாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவை சுகாதார,மருத்துவத் துறையில்   நோய் கண்டறிதலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த தொழில்நுட்பங்கள், நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, அவற்றைத் துல்லியமாக   நோய் வாய்ப்பட்டவரின் உடல்நிலைக்கேற்ற  தகுந்த சிகிச்சைகளை வழங்க உதவுகின்றன.

மருத்துவச் செலவுகளைக் குறைக்கின்றன. மேலும், இக்கட்டான சூழலில், உயிரைக் காப்பாற்றுகின்றன.  மருத்துவர்களுக்கு மாற்றாக அல்ல, உதவுவதற்காக AI  பயன்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள டெமிஸ்  ஹசாபிஸை  வாழ்த்தலாம்.

Tags: Modern medical revolution: AI that cures all diseasesஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AIPerplexity AI நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
ShareTweetSendShare
Previous Post

ED சோதனை சட்டவிரோதமானது அல்ல : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

சீன சந்தையில் இந்தியா : இந்திய-சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

இயல்பாக நடக்க பயிற்சி மேற்கொண்ட சுபன்ஷு சுக்லா!

லண்டன் : அமைதியாக எதிர்விணை ஆற்றிய இஸ்கான் அமைப்பினர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies