நவீன மருத்துவ புரட்சி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AI!
Sep 10, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவீன மருத்துவ புரட்சி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AI!

Web Desk by Web Desk
Apr 23, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 5 ஆண்டுகளில், அனைத்து நோய்களையும் AI-யால் குணப்படுத்த முடியும் என்று Google DeepMind CEO ( Demis Hassabis) டெமிஸ் ஹசாபிஸ் கூறியிருந்த நிலையில், அவர் ஒரு ஜீனியஸ் என்று Perplexity AI நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாராட்டியுள்ளார். யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ் ? அவரை ஏன் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பாராட்டினார் ? என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

பிரிட்டனைச் சேர்ந்த 48 வயதான கணினி விஞ்ஞானி, பேராசிரியர் டெமிஸ் ஹசாபிஸ் ஒரு பிறவி மேதை ஆவார். புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக, இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்ற ஹசாபிஸ், நான்கு வயதிலேயே சதுரங்கத்தில் நட்சத்திர வீரராக விளங்கினார்.

13 வயதில் செஸ் மாஸ்டரான டெமிஸ் ஹசாபிஸ், கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும் ‘வீடியோ கேமிங்’- கணினி விளையாட்டு வடிவமைப்பில் பணியாற்றினார். முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதற்கு முன்பு, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

2010 ஆம் ஆண்டில், இயந்திர கற்றல் நிறுவனமான (DeepMind) டீப் மைண்டை தொடங்கினார். இது ஒரு செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தைக் கூகுள் வாங்கியது.

Google DeepMind நிறுவனத்தின் CEO வாக இருக்கும் டெமிஸ் ஹசாபிஸ், அடுத்த 5 ஆண்டுகளில் நோய்களைக் குணப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், அனைத்து நோய்களையும் AI குணப் படுத்தும் என்று கணித்துள்ளார்.

சராசரியாக, ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க பத்து ஆண்டுகள் ஆகும். கூடுதலாக,அதைக் கண்டுபிடிக்கப் பல பில்லியன் டாலர்கள் செலவாகும். AI மூலம், ஒரு வாரத்தில் கூட ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்து விடலாம்.

நம்ப முடியாத விஷயமாக இருந்தாலும், இது மருத்துவ உலகின் புரட்சியாகும். மேலும்,   AI  உதவியுடன் அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று டெமிஸ் ஹசாபிஸ் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

ஒரு Phd மாணவருக்கு, ஒரு புரதத்தைக் கண்டுபிடிக்கக் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தேவைப்படுகிறது.ஆனால், 200 மில்லியன் புரத கட்டமைப்புகளை மேப்பிங் செய்வதன் மூலம்  ஒரே ஆண்டில், ஒரு பில்லியன் ஆண்டுக்கால Phd ஆராய்ச்சிப் படிப்பை முடிக்க முடியும்.

எனவே, 2030ம் ஆண்டில், ஒரு மருத்துவமனை வளாகம்  என்பது பெரிய அளவிலான  கட்டிடங்கள் இருக்காது. ஒற்றை டிஜிட்டல் உள்கட்டமைப்போடு இணைக்கப்பட்டிருக்கும்.

ஒருங்கிணைந்த கட்டளை மையங்கள், நெட்வொர்க் முழுவதும் விநியோகம் மற்றும் தேவையை LIVE- வில் கண்காணிக்கும் வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். மேலும், ரோபோடிக் செவிலியர்கள் மருத்துவச் சேவையை வழங்கலாம்.

டெமிஸ்  ஹசாபிஸின் நேர்காணல்  வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட அரவிந்த் ஸ்ரீனிவாஸ், டெமிஸ் ஒரு ஜீனியஸ் என்றும், இது நடப்பதற்கு, உலகில் உள்ள அனைத்து வளங்களையும்  அவருக்கு வழங்கலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

வெற்றிகரமான சிகிச்சைக்கும், பூரணக் குணமடைதலுக்கும் ஆரம்பக்கால நோய் கண்டறிதல் மிக முக்கியமானதாகும். செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) ஆகியவை சுகாதார,மருத்துவத் துறையில்   நோய் கண்டறிதலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த தொழில்நுட்பங்கள், நோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே, அவற்றைத் துல்லியமாக   நோய் வாய்ப்பட்டவரின் உடல்நிலைக்கேற்ற  தகுந்த சிகிச்சைகளை வழங்க உதவுகின்றன.

மருத்துவச் செலவுகளைக் குறைக்கின்றன. மேலும், இக்கட்டான சூழலில், உயிரைக் காப்பாற்றுகின்றன.  மருத்துவர்களுக்கு மாற்றாக அல்ல, உதவுவதற்காக AI  பயன்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள டெமிஸ்  ஹசாபிஸை  வாழ்த்தலாம்.

Tags: Modern medical revolution: AI that cures all diseasesஅனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AIPerplexity AI நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸ்
ShareTweetSendShare
Previous Post

ED சோதனை சட்டவிரோதமானது அல்ல : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

சீன சந்தையில் இந்தியா : இந்திய-சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies