இன்ஸ்டாகிராமில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களைப் பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களைப் பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது.