மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரான ‘e விட்டாரா’ விரைவில் இந்தியாவில் வெளியாகவிருக்கிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் சர்வதேச அளவிலும், அதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரியில் இந்தியாவிலும் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியது மாருதி.
சர்வதேச அளவில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியாவிலேயே இந்தக் காரை முதலில் வெளியிடுவோம் என மாருதி தெரிவித்திருந்தது.
இன்னும் சில வாரங்களில் புதிய கார் வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.