பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கர்நாடகாவைச் சேர்ந்த பாரத் பூஷன் உடலுக்கு முதலமைச்சர் சித்தராமையா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பெங்களூரு மட்டிகேரில் உள்ள பாரத் பூஷனின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் சித்தராமையா அவரது உடலுக்குக் கன்னட மக்கள் சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த கன்னடர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் எனவும், பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் மத்திய அரசுக்கு முழு ஆதரவளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.