பஹல்காம் தாக்குதலுக்கும், இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமை இருப்பதாக இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், பயங்கரவாத குழுக்களுக்கு இடையே ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.
ஹமாஸ் அமைப்பினர் காஷ்மீர் பயங்கரவாதிகளை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி அதைத் தூண்டுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.