பழிவாங்க சரியான நேரம் : காத்திருந்த இந்தியா - கதறும் பாகிஸ்தான்!
Oct 5, 2025, 04:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பழிவாங்க சரியான நேரம் : காத்திருந்த இந்தியா – கதறும் பாகிஸ்தான்!

Web Desk by Web Desk
Apr 27, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயங்கரவாத பாகிஸ்தானைக்  கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றால், அந்நாட்டின் பொருளாதாரத்தை இந்தியா முற்றிலுமாக தகர்க்க வேண்டும் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

காஷ்மீரின் பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி- வாகா எல்லை உடனடியாக மூடல், பாகிஸ்தான் மக்களுக்கு இந்திய விசா ரத்து,  டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் இஸ்லாமாபாத் தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைப்பு என  5 முக்கிய நடவடிக்கைகளைப் பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ளது.

தீவிரவாதத் தாக்குதலின் தீவிரத்தை உணர்ந்து இந்த முக்கிய நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ள  நிலையில், இது மட்டும் போதாது. பாகிஸ்தான் மீது மேலும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும்  உடனடியாக, பாகிஸ்தானுக்கு மருந்துப் பொருட்களின் விநியோகத்தை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

பாகிஸ்தானுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகள் செய்வதை உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சியில் இருக்கும் பாகிஸ்தான், அமெரிக்காவையும்,சீனாவையும் சாதுரியமாக தனக்கு உதவ வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு F-16 ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா மானியத்தில் வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு  எதிராக  F-16 போர் விமானங்களைப் பயன்படுத்தக் கூடாது  என்ற அமெரிக்காவின்  நிபந்தனை    இருந்தாலும், அவற்றை  ஒருபோதும் பாகிஸ்தான் அமல்படுத்துவதில்லை என்பது நிதர்சனம்.

மேலும், இவற்றில் அதிநவீன ஏவுகணைகள், மேம்பட்ட கடற்படை போர்க்கப்பல்கள், உளவு பார்க்கும் மற்றும் துல்லியமாகத் தாக்கும்  ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள்  எனச் சீனாவிடமிருந்தே பாகிஸ்தான் ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. பாகிஸ்தானின் மொத்த ஆயுத இறக்குமதியில் சீனாவின் பங்கு 81 சதவீதம் ஆகும்.

பொருளாதார வீழ்ச்சியில் உள்ள பாகிஸ்தானின் அந்நிய செலவாணி இருப்பு 10.5 பில்லியன் டாலர் ஆகும் . இந்நிலையில், பொருளாதார ரீதியாகப் பாகிஸ்தானை அழுத்துவது இந்தியாவுக்கு மிக எளிதாகும்.  குறிப்பாக, பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் அதிக நிதியுதவி செய்து வருகின்றன. சமீபத்தில், சீனாவுடன் சேர்ந்து, இந்த இரு நாடுகளும்,பாகிஸ்தானுக்கு  5.51 பில்லியன் அமெரிக்க டாலர் கடன்  வழங்க முன் வந்துள்ளன.

இப்படி, நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றக் கடன் வாங்கும் பாகிஸ்தான், அந்த நிதியை இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதை எடுத்துக் காட்டி, அந்நாடுகளின் மீதமுள்ள நிதி உதவி தவணைகளை நிறுத்த இந்தியா வற்புறுத்த வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாதாரண நேரங்கள் அசாதாரண நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றன. பஹல்காம் தாக்குதல் அப்படியொரு வாய்ப்பை இந்தியாவுக்குத்  தந்துள்ளது.  சில நடவடிக்கைகள் பேசப்படாமலும், கண்ணுக்குத் தெரியாமல் இருந்தாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. அந்த வகையில், பாகிஸ்தானைத் தனிமைப் படுத்துவதில் இந்தியா ராஜ தந்திரமாகச் செயல்படவேண்டும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: இந்தியாThe right time for revenge: India waited - Pakistan cried outகதறும் பாகிஸ்தான்காஷ்மீரின் பகல்காம் தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

கள்ளக்குறிச்சி அருகே நிலத்திலேயே அழுகும்100 டன் முலாம் பழங்கள்!

Next Post

அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies