அம்பாசமுத்திரம் அருகே ஆட்டோ மோதியதில் இளம்பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் சிவந்தி புரம் பகுதியில் இசக்கியம்மாள் என்பவர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த ஆட்டோ அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், காயமடைந்த இசக்கியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.