ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு, அமெரிக்க தேசிய புலனாய்வுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹல்காமில் 26 இந்துக்களைக் குறிவைத்துக் கொன்ற கொடூரமான இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் தாங்கள் ஒற்றுமையுடன் நிற்பதாகத் தெரிவித்துள்ள அவர், அன்புக்குரியவர்களை இழந்த இந்திய மக்கள் அனைவருக்கும் தனது பிரார்த்தனைகளையும், ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
மேலும், இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணமானவர்களை இந்தியா வேட்டையாடும்போது, தாங்களும் உடனிருந்து ஆதரவளிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.