கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
செட்டிப்பாளையம் பைபாஸ் சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கினர். வெற்றி பெறும் வீரர்களுக்கும், மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.