செங்கோட்டை செல்லும் விரைவு ரயிலில் ஏசி வேலை செய்யாததால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தின் ஒன்பதாம் நடைமேடையில் இருந்து செங்கோட்டைக்கு சிலம்பு விரைவு ரயில் புறப்பட்டது. அப்போது, ஏசி பெட்டியில் மின்சாரம் இல்லாததால் ரயிலை இயக்க விடாமல் பயணிகள் சங்கிலியை பிடித்து நிறுத்தினர்.
தொடர்ந்து, ரயில் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், ஏசி சரிசெய்யப்பட்ட பிறகு ஒன்றரை மணி நேரம் தாமதமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து சிலம்பு விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.