நமது பாரத நாடு உலகின் பழமையான நாகரிகம் எனவும் அமைதியை விரும்பும் நாடு என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கலந்துகொண்டார். பின்னர் விழா மேடையில் சிறப்புரையாற்றிய அவர், நமது பாரத நாடு உலகின் பழமையான நாகரிகம் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் உணவு பற்றாக்குறை இருந்த காலம் மாறி தற்போது அனைவருக்கும் அன்றாடம் உணவு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கருத்து சுதந்திரம் மற்றும் வாய்ப்புகளை சமமாக வழங்குவதில் பாரதம் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவித்தார்.
பின்னர் வேளாண் துறை வளர்ச்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.