அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது.
ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. இந்த விவகாரத்தால் அங்குச் செல்லும் பிலிப்பைன்ஸ் படகுகள் மீது சீன கடற்படையினர் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.
இதில் பிலிப்பைன்சுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அமெரிக்க ராணுவம் முதன்முறையாகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் நிறுத்தி உள்ளது. தற்போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.