ஆட்சியை பிடித்த மார்க் கார்னி : இந்தியா- கனடா உறவில் உதயமாகும் புதிய அத்தியாயம்!
Jul 23, 2025, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆட்சியை பிடித்த மார்க் கார்னி : இந்தியா- கனடா உறவில் உதயமாகும் புதிய அத்தியாயம்!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் வர்த்தகப் போர் மிரட்டலுக்கு மத்தியில், கனடா நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மார்க் கார்னி தலைமையில் தேர்தலைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கனடாவின் பிரதமராக   மார்க் கார்னி வெற்றி  இந்தியா கனடா உறவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் ?  என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 2015ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக ஆட்சியிலும் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. Fyptmfகடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடாவின் புதிய பிரதமராகவும் மார்க் கார்னி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி பதவியேற்றார். வரும் அக்டோபர் வரை பதவி காலம் இருந்த நிலையில், பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தலை அறிவித்தார்.

கடந்த ஏப்ரல் 28ம் தேதி, கனடாவில் தேர்தல் நடந்தது. லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும் , கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் பிரதமர் வேட்பாளராகவும் களம் கண்டனர்.

343 உறுப்பினர்கள் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில், 167 இடங்களில் லிபரல் கட்சியும்,145 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு செப்டம்பரில், காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்புள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதிலிருந்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியது. இருநாடுகளில் இருந்தும் தூதர்கள் வெளியேற்றப் பட்டனர். இருதரப்பு வர்த்தக உறவுகள் முடக்கின. கனடாவுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

இதனைத் தொடர்ந்து, கனடாவில் இந்துக்கள் மீதும் இந்துக் கோயில்கள் மீதும் பல்வேறு வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காலிஸ்தான் பயங்கர வாதிகளுக்கான அரசாகவே ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி இருந்தது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே,மார்க் கார்னி, தனது பரபரப்பான தேர்தல் பிரச்சார நேரத்தில்   ராம நவமியைக்  கனடா வாழ் இந்துக்களுடன் கொண்டாடினார்.   இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளைத் தேடுவதாகப் பல சந்தர்ப்பங்களில் மார்க் கார்னி குறிப்பிட்டிருக்கிறார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிகள் நீங்க கார்னி நிச்சயம் வழி செய்வார் என்ற மக்களின் நம்பிக்கையே  கார்னிக்கு மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.

கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவேன் என மிரட்டுவதும்,  கனடா மீது அதிக வரி விதிப்பதும், போதைப்பொருட்களைக் கனடா ஏற்றுமதி செய்கிறது என்று சொல்வதும்  எனத் தொடர்ந்து  கனடாவை ட்ரம்ப்  விமர்சனம் செய்து வருவது கனடா மக்களுக்குப் பிடிக்கவில்லை.

ட்ரம்ப்பைக்  கடுமையாக எதிர்த்து நிற்கிறார் கார்னி. அதனால், ட்ரம்புக்கு ஏற்ற ஆள் ‘கார்னி’ தான் என்று கனடா மக்கள் முடிவெடுள்ளனர். லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான பழைய உறவு முறிந்து விட்டது என்றும், அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியில் மீண்டு விட்டோம் என்றும், ட்ரம்பின் வர்த்தகப் போரில் வெற்றி பெறுவோம் என்றும் கார்னி கூறியிருக்கிறார்.

அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரேவும் நாட்டின்  நலனுக்காகவும், ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கு எதிராகவும், கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதமருடன் சேர்ந்து பணி புரியும் என்று உறுதியளித்திருக்கிறார். மொத்தத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ட்ரம்ப்பை எதிர்ப்பதில் குறியாக உள்ளனர்.

தேர்தல் வெற்றி பெற்று பிரதமர் ஆகி இருக்கும் மார்க் கார்னிக்கு , ட்ரம்பை கையாள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தெரியும். புதிய நண்பர்கள் மற்றும் புதிய வர்த்தக கூட்டாளிகளின் தேவையை அடிக்கடி அடிக்கோடிட்டுக் காட்டிவரும் மார்க் கார்னி, இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன என்று கடந்த மார்ச் மாதமே கூறியிருந்தார்.

கூடுதலாக, பயங்கர வாத அமைப்பான காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் ஜக்மீத் சிங்கின் தேசிய ஜனநாயகக் கட்சியின் தேர்தலில்  தோல்வி அடைந்துள்ளது.  தோல்வி காரணமாக NDP தலைவர் பதவியில் ஜக்மீத் சிங் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், ட்ரம்பை எதிர்க்க இந்தியாவின் ஆதரவு மார்க் கார்னிக்குத் தேவைப்படுகிறது.

கனடா விற்பனைக்கு அல்ல என்று தெளிவாகக் கூறும் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முழு கவனம் செலுத்தும் வகையில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: கனடாMark Carney takes power: A new chapter is dawning in India-Canada relationsஆட்சியை பிடித்த மார்க் கார்னிஇந்தியா- கனடா
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் போட்டியில் கலக்கும் இளம் புயல் : ஒரே நாளில் உச்சம் தொட்ட வைபவ் சூர்யவன்சி!

Next Post

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் : நியாயப்படுத்த முடியாது – ஐநா சபை கடும் கண்டனம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

மத்திய அரசின் நிதி எல்லாம் எங்கே சென்றது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies