ஐபிஎல் போட்டியில் கலக்கும் இளம் புயல் : ஒரே நாளில் உச்சம் தொட்ட வைபவ் சூர்யவன்சி!
Oct 4, 2025, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் கலக்கும் இளம் புயல் : ஒரே நாளில் உச்சம் தொட்ட வைபவ் சூர்யவன்சி!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக இளம்வயதில் குறைந்த பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ள வைபவ் சூர்யவன்சி, ஒரே நாளில் கிரிக்கெட் உலகின் வருங்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். அவரது சாதனை பயணம் பற்றிப் பார்க்கலாம்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கள்கிழமை நடந்த 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் ஐபிஎல் தொடரிலேயே மிக இளம் வீரராகக் களமிறங்கிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி, வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காட்டிய சம்பவம் தற்போது கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.

நடப்பாண்டிற்கான மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூபாய் 1 கோடியே 10 லட்சத்திற்கு வாங்கப்பட்டார் வைபவ். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐபிஎல் தொடர் வந்த பிறகு பிறந்த வைபவ்-ஐ ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்த போது, ஐபிஎல் களமே பரபரப்பானது.

இந்த நிலையில் தான் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாத போது, லக்னோ அணிக்கு எதிராக ஓபனிங் இறங்கினார் வைபவ். தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய வைபவ், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

குறிப்பாக அந்த போட்டியில் 34 ரன்கள் விளாசிய வைபவ், அன்றைய தினமே தான் ஒரு சிறுவன் அல்ல என தனது பேட்டிங் திறன் மூலம் வார்னிங் கொடுத்தார். RCB உடனான அடுத்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறிய வைபவ், நேற்று நடைபெற்ற குஜராத் அணியுடனான போட்டியில் பட்டையைக் கிளப்பினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி, 17 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசியதோடு, வெறும் 35 பந்துகளில் சதமாக அதனை விளாசி அசத்தினார். இதன் மூலம் டி20 வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும், ஐபிஎல் தொடரில் 2 வது அதிவேக சதம் விளாசி வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

வைபவ் சூர்யவன்சிக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2021ம் ஆண்டு தனது வீட்டு மொட்டை மாடியில் பயிற்சி செய்து வந்த அவரது வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைபவ் சூர்யவன்சி சேப்பாக்கம் கண்டெடுத்த ஒரு முத்து ஆவார். ஆம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், U19 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கம் MA சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகக் களம் கண்ட வைபவ், 56 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், அவரது திறனைக் கண்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை மெகா ஏலத்தில் கொத்தாகத் தூக்கியது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிரடி காட்டிய வைபவ் மீது நம்பிக்கை வைத்து, அவரை ஏலத்தில் வாங்கியுள்ள ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜேக் லஷ் மெக்ரம், வைபவ் குறித்து ஏற்கனவே, “அவர் ஒரு அபாரமான திறமைசாலி, அதீத தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் தான் ஐபிஎல் வரை முன்னேறி வர முடியும். அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, திறமையை வளர்த்தெடுப்பதற்கு வரும் மாதங்களில் நிறைய வேலைகள் எங்களுக்கு இருக்கும்” எனப் பேசியிருந்தார்.

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கையை வைபவ் பொறுப்புடன் நிறைவேற்றி உள்ளார். இனி வரும் போட்டிகளிலும், இந்திய அணிக்காக வருங்கால இடங்களிலும் வைபவ் சூர்யவன்சிக்கான இடம் நிரந்தரமே என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.

Tags: who reached the peak in a single dayIPL 2025.Vaibhav Suryavanshiipl 2025 newsThe young storm that is shaking up the IPL: Vaibhav Suryavanshi
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!

Next Post

ஆட்சியை பிடித்த மார்க் கார்னி : இந்தியா- கனடா உறவில் உதயமாகும் புதிய அத்தியாயம்!

Related News

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

போர் நிறுத்தம் கோர வேண்டிய நிலைக்கு பாகிஸ்தானை இந்தியா தள்ளியது – விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!

ஹமாஸ் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு!

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் – நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies