இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், வாகா- அட்டாரி எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைச் சாலை மார்க்கமாக இணைக்கும் அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டதோடு ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகு யாரும் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பின்படி அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்தியாவில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானியக் குடிமக்களுக்கு மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் அட்டாரி எல்லை வழியாக மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானியர்கள் வெளியேறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.