சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட வந்த நடிகர் சிவகார்த்திகேயனுடன், சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வை இடுவதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார்.
தொடர்ந்து அங்குக் காட்சிப் படுத்தப்பட்டுள்ள தொல் பொருட்களைத் தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.